Sunday, December 6, 2020

ஹாஸ்டல் 1

 


நானும், கோவிந்தும் நெஞ்சு நிறைய பயத்துடன், தலையை குனிந்தவாறு நடந்து சென்று கொண்டிருந்தோம். கோவிந்தை எனக்கு நான்கு நாட்களாகத்தான் தெரியும். இருவரும் நான்கு நாட்கள் முன்னால்தான் இந்த இஞ்சினியரிங் காலேஜில் சேர்ந்தோம். இந்த காலேஜில் ராகிங் ஜாஸ்தி என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதனால்தான் இந்த பயம். நான்கு நாட்களாக ஹாஸ்டலை விட்டு வெளியில் வரவே இல்லை. இன்று வரவேண்டிய சூழ்நிலை. வேறு வழியில்லாமல் இந்த கோவிந்தை கெஞ்சி, துணைக்கு அழைத்து வருகிறேன்.

 

அதோ.. அந்த டீக்கடையை தாண்டிவிட்டால் பிரச்னை இல்லை. டீக்கடையில் சீனியர் பையன்கள் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. அவர்கள் கையில் சிக்கினால் அவ்வளவுதான். நான் கூட பரவாயில்லை. கோவிந்த் ரொம்ப பயந்த சுபாவம். ஐயர் பையன். படிப்பை தவிர வேறு எதிலும் நாட்டமில்லாத அப்பாவி. அவர்கள் எங்களை பார்க்கக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டே, பூனை நடை நடந்தோம். நாங்கள் தலையை குனிந்தவாறே டீக்கடையை கடக்கும்போது காதைக் கிழித்துக் கொண்டு அந்த குரல் கேட்டது.

 

"ஏய்...ங்கோத்தா ஃபர்ஸ்ட் இயர்... வாங்கடா இங்க.."

 

ஐயோ..!! வசமாக மாட்டிக் கொண்டோம். நாங்கள் திரும்பி பார்க்க, கையில் டீக்ளாசொடு அந்த சீனியர் மாணவன் எங்களை அழைத்தான். வேறு வழியில்லாமல் நானும் கோவிந்தும் தடதடக்கும் இதயத்துடன், எங்களை அழைத்த அந்த மாணவனை நெருங்கினோம். கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு பவ்யமாக அவன் முன்னால் சென்று நின்றோம்.

 

"ஏண்டா.. இங்க சீனியர் நாங்க ரெண்டு பேரு உக்காந்திருக்கோம்.. நீங்க பொச்சை காட்டிட்டு போயிட்டுருக்கீங்க.. வந்து சல்யூட் அடிச்சுட்டு போகணும்னு தெரியாது..?" அவன் கோபமாக கேட்டான்.

 

"சாரி சீனியர்.. உங்களை கவனிக்கலை.." என்றேன் நான்.

 

"ம்ம்ம்... இப்போ கவனிச்சுட்டீங்கல்ல..? போடு ஒரு சல்யூட்டை..."

 

நானும் கோவிந்தும் உடலை விறைத்து, போலீஸ் மாதிரி அவனுக்கு ஒரு சல்யூட் வைத்தோம். அவன் முகத்தில் இப்போது கோபம் கொஞ்சம் குறைந்திருந்தது.

"பேர் என்னடா...?" என்றான் அருகில் இருந்த இன்னொரு சீனியர்.

 

"அசோக்.." என்றேன் நான்.

 

"கோவிந்த்.." என்றான் கோவிந்த்.

 

"ம்ம்ம்.. எங்க கெளம்பிட்டீங்க..?"

 

"லேடிஸ் ஹாஸ்டல் வரை போறோம்.. சீனியர்.." என்றேன் நான்.

 

"லேடிஸ் ஹாஸ்டலா...? ங்கோத்தா.. சேந்து நாலு நாள் கூட ஆவலை.. அதுக்குள்ளே பூலை கையில புடிச்சுட்டு லேடிஸ் ஹாஸ்டல் கெளம்பிட்டீங்களா..?"

 

"ஐயையோ... அப்படிலாம் இல்லை சீனியர்.. என் அக்காவை பாக்கப் போறோம்.." என்றேன் நான் பதறிப்போய்.

 

"அக்காவா..? யார் உன் அக்கா..?"

 

"அனுஷா.. பைனல் இயர் படிக்கிறா.."

 

"ஓ.. அனுஷா தம்பியா நீ..? ஏன்டா.. முன்னாடியே சொல்லக் கூடாது..? சரி.. சரி... கெளம்புங்க.."

 

"தேங்க்ஸ் சீனியர்.."

 

சொல்லிவிட்டு நானும் கோவிந்தும் நடையை போட்டோம். பின்னால் இருந்து இப்போது வேறொரு குரல் கேட்டது.

 

"ஏய்.. யார்டா மச்சான் அவனுக..? பர்ஸ்ட் இயரா..? கூப்புடு இங்க..?"

 

"ஏய்.. ஏய்.. விடுடா அவனுகளை.. அனுஷா தம்பிடா அவன்.. ஏய்.. நீங்க போங்கடா.."

 

என்று அவன் திரும்பி நின்று பார்த்த எங்களை பார்த்து சொன்னான். நாங்கள் மீண்டும் லேடிஸ் ஹாஸ்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். கோவிந்த் மெல்ல என்னிடம் கேட்டான்.

 

"ஹே அசோக்.. பரவாயில்லையே.. உன் அக்கா பேரை சொன்னதும் விட்டுட்டாங்களே..?"

 

"நான்தான் சொன்னேன்ல..? என் அக்கா இந்த காலேஜ்ல ரொம்ப பாப்புலர்டா.. யூனியன் சேர்மன்.."

 

"ம்ம்.. கொடுத்து வச்சவன்டா நீ.. அக்கா பேரை சொல்லியே ராகிங் இல்லாம தப்பிச்சுக்கலாம்.."

 

அவன் குரலில் இப்போது கொஞ்சம் பொறாமை கலந்திருந்தது. ஒரு பத்து நிமிடம் பொறுமையாக நடந்ததில் லேடிஸ் ஹாஸ்டல் வந்தது. அக்கா வெளியில் எங்களுக்காக காத்திருந்தாள். எங்களை பார்த்ததும் ஸ்நேகமாய் புன்னகைத்தாள். நான் கோவிந்தை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அக்கா கையில் வைத்திருந்த பணத்தை என்னிடம் நீட்டினாள். நான் வாங்கி எண்ணிப் பார்த்தேன். நான் கேட்டதை விட மூன்றாயிரம் அதிகமாக இருந்தது.

 

"என்னக்கா.. அதிகமா இருக்கு..?"

 

"ம்ம்.. நல்லதா நாலு டிரஸ் வாங்கிக்கோ.. இந்த மாதிரி ட்ரெஸ்லாம் இனிமே போடாத.. இன்னும் ஸ்கூல் பையனா நீ..? இன்னும் நாலு வருஷத்துல நீ ஒரு இஞ்சினியர்.. டீசன்ட்டா ட்ரெஸ் பண்ணனும்.. புரிஞ்சதா..?"

 

"சரிக்கா.."

 

"இந்த வாரம் ஊருக்கு போறேன்.. அம்மாட்ட ஏதாவது சொல்லனுமா..? வீட்டுல இருந்து ஏதாவது எடுத்துட்டு வரணுமா..?"

 

"ஒன்னும் இல்லைக்கா.. அம்மா இட்லிப்பொடி எடுத்து வைக்க மறந்துட்டா.. நீ வர்றப்போ எடுத்துட்டு வர்றியா..?"

 

"ம்ம்.. நான் வச்சிருக்குறதை வேணா தர்றேன்.. எடுத்துட்டு போறியா..?"

 

"வேணாக்கா.. நீ ஊர்ல இருந்து எடுத்துட்டு வா.. நான் வந்து வாங்கிக்குறேன்.."

 

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, எங்களுக்கு பின்னால் இருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்க, நாங்கள் திரும்பி பார்த்தோம்.

 

"ஏய் அனுஷா.. யார்டி இவனுக..? ஃபர்ஸ்ட் இயரா..?" என்றாள் வந்தவள்.

 

"ஆமாண்டி.."

 

"ஏன் இங்கே வச்சு பேசிக்கிட்டு இருக்க..? ரூமுக்கு கூட்டிட்டு வா.. கொஞ்ச நேரம் ஜாலியா ராக் பண்ணிக்கிட்டே பேசலாம்.."

 

"ஏய் கயல்.. இவன் என் தம்பிடி.."

 

"ஓ.. உன் தம்பியா..? பேர் என்னடா..?"

 

"அசோக்.." என்றேன் நான் அமைதியாக.

 

நான் சொன்னதும் அந்த கயல் என்னை இரண்டு வினாடி ஏற இறங்கப் பார்த்தாள். அப்புறம் என் அக்காவிடம் திரும்பி சொன்னாள்.

 

"சரி.. உன் தம்பியாவே இருந்துட்டு போகட்டும்.. ராகிங் பண்ணக் கூடாதா..?"

 

"ஏய் வேணாண்டி.. பாவம் அவன்.."

 

"என்ன பாவம்..? இதோ பாரு அனுஷா.. ராகிங்க்ல ஃபேமிலி சென்ட்டிமென்ட்லாம் பாக்கக் கூடாதுன்றதுதான் நம்ம ரூல்.. போன வருஷம் என் கசினை என்ன பாடு படுத்துனீங்க..? எனக்கு உன் தம்பியை ராக் பண்ணனும்.. ரூமுக்கு கூட்டிட்டு வா.."

 

"ஏய் ப்ளீஸ்டி கயல்.." அக்கா எனக்காக கெஞ்சினாள்.

 

"ம்ஹூம்.. முடியாது.. ரூல்னா ரூல்தான்.. ஐ வான்ட் டு ராக் யுவர் ப்ரதர்.." அவள் பிடிவாதமாக சொல்ல,

 

"கண்டிப்பா பண்ணனுமா..?" என்று கேட்டாள் அக்கா.

 

"கண்டிப்பா பண்ணனும்.."

 

No comments:

Post a Comment